வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி..ஐடியா நம்பர் இரண்டு

அத ஏன் கேக்குறீங்க. உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது என்கிற எனது முதல் திட்டம் பற்றி நிறைய வாசகர்கள் தங்களது நன்றியையும் சந்தோசத்தையும் பகிர்ந்துகொண்டதோடு இது போல நிறைய எழுதசொல்லி அன்பு மடல்கள் நிறைய. எனவே எனது இரண்டாவது ஐடியாவையும் இதன் மூலம் எழுத விரும்புகிறேன்.

திட்டம் நம்பர் இரண்டு.

ஐடியா நம்பர் ஒன்றில் குறிப்பிட்டது போல பிச்சை எடுத்து பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஐடியா ரொம்ப சிம்பிள். முதலில் கடுமையாக உழைக்க கூடாது என்ற சிந்தனையை நன்றாக மனதில் கொண்டபின்னர் இதை செயற்படுத்தவும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஆரம்பத்தில் உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குங்கள். அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் திருப்பி தருவதாக வாக்குறுதி கொடுங்கள். அடுத்த மாதம் இதே போல் வேறு ஒரு நபரிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் ஆயிரம் ரூபாயை முதல் மாதம் கடன் வாங்கியவரிடம் சொன்ன திகதிக்கு முன்னர் திருப்பி கொடுத்துவிடுங்கள். பிறகு இன்னொருவரிடம் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் இரண்டாயிரம் வாங்கியவரிடம் அதை திருப்பி கொடுப்பதுடன் ஆயிரம் ரூபாயை நம் கை செலவுக்கு வைத்து கொள்ளலாம்.
பிறகு இன்னொரு ஆளிடம் (அல்லது ஏற்கனவே கடன் வாங்கியவரிடம் ) மீண்டும் ஐயாயிரம் ரூபாய் வாங்கி நாலாயிரத்தை கொடுத்துவிட்டு ஆயிரத்தை செலவு செய்து கொண்டு இதே போல் ஜாலியாக இருக்கலாம்.
ஏன் சரியான திகதியில் திருப்பி கொடுக்க வேண்டும் தெரியுமா? அப்பத்தான் அடுத்த மாதம் அதே நபரிடம் மீண்டும் கடன் கேட்கும்பொழுது நம்ம நாணயத்தை பார்த்து பெரிய தொகை கடனாக தருவார். துளி கூட நம்ம மேல் சந்தேகம் வராது.
இதேபோல் ஒவ்வொருவரிடமும் மாதா மதம் கடன்வாங்கி போன மாதம் கட வாங்கியவருக்கு சொன்ன நேரத்துக்கு பணத்தை திருப்பி கொடுப்பதுடன் நம்ம கை செலவுக்கும் வைத்துக்கொண்டு ஜாலியாக செலவு செய்யலாம்.
இப்படியே ஆயிரம், இரண்டாயிரம் என ஆரம்பித்து லச்சம் ரூபாய் வரை சாதாரணமாக கடன் வாங்கி ஜாலியாக இருங்கள். உங்களுக்கு போரடித்தால் ஒரு இருபது லச்ச ரூபாயை கடன் வாங்கிவிட்டு அதில் ஒரு ஏஜென்சி யை பிடித்து கனடா அல்லது லண்டன் போன்ற ஒரு நாட்டுக்கு கம்பி நீட்டிவிட வேண்டியது தான்.
யாரால் என்ன பண்ண முடியும்? இல்லன்னா ஒரு பேங்க் ல கடன் வாங்கிட்டு அப்புறம் மஞ்ச கடுதாசி குடுக்கலாம். பல வழிகள் இருக்குங்க.
வெட்டி பய அல்லதுவேலை இல்லாதவங்க தான் மாச சம்பளத்துக்கு வேலைக்கு போவாங்க. நமக்கு தான் ஐடியா இருக்கே அப்புறம் என்ன? தூள் கிளப்புங்க. ...
வாழ்த்துக்கள்.

1 கருத்து: