வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

கல்யாணம் ஒரு சப்பை மேட்டர்


முட்டையிட்ட கோழிக்கு தான் தெரியுமாம் ......எரிச்சல் என்பது போல கல்யாணம் பண்ணினவுனுக்கு தான் அந்த துன்பம் எல்லாம். காதலிக்கும் போது எவ்ளவு ஜாலியாக இருக்கும் ஆனால் சில நாட்கள் கழிந்தபின்னர்

ஏண்டா இந்த தப்பை பண்ணிட்டோமே கொஞ்சம் யோசிச்சு இருக்க கூடாதா? இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நல்ல பிகரை மடக்கியிருக்கலாமே. இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும்.



கீழே நான் சொல்லியிருப்பது போல நல்ல ஐடியா க்களை நீங்கள் செய்தால் கல்யாணம் என்பது பாரம் போல இருக்காமல் ஜாலியாக இருக்கும்.



உதாரணமாக நீங்கள் கல்லூரியில் படிப்பவர் என வைத்துக்கொண்டால் அங்கே ஒரு மொக்கை பிகரை கஷ்டப்பட்டு மடகிவிட்டீர்கள் என வைத்துகொள்வோம். இப்போ காபி ஷாப், கிளப் , சினிமா, பீச் இதுபோன்ற இடங்களுக்கு கூடிபோகும் பொழுது சில நேரம் நீங்கள் பணம் கொடுப்பீர்கள். சில நேரம் பிகர் கொடுக்கும். இப்போ உங்களுக்கு செலவு ஒரு பாரமாக இருக்காது. காரணம் அந்த பிகருக்கு அவங்க அம்மா அப்பா சாப்பாடு, உடுப்பு, தங்குமிடம் எல்லா செலவும் அவங்களே பார்துகொல்வதால் காதல் அல்லது சைட் அடிப்பது ஆண்களுக்கு ரொம்ப சுலபம்.



நம்ம சும்மா வெளிய கூட்டி போனால் போதும். பெரிய செலவு இல்லை அத்துடன் பாரமாகவும் இருக்காது. இதே போல கல்யாணம் ஆனபின்னும் அந்த பெண்ணிற்கு சாப்பாடு, உடுப்பு, தங்குமிடம் உட்பட எல்லாத்தையும் அவங்க அப்பா அப்பவே பார்க்கவேண்டும், நமக்கும் நம்ம வீட்ல எல்லாமே தந்துடுவாங்க.



எனவே , சும்மா சைட் அடிப்பது போல டெய்லி வெளியே வந்து இருவரும் சுத்திவிட்டு இரவுக்கு முன்னர் வீடு திரும்பினால் போதும். அவங்க வீட்ல அவளுக்கு சாப்பாடு நம்ம வீட்ல நமக்கு சாப்பாடு.மற்ற விசயங்கள் அப்புறம் பேசிக்கலாம். இப்படி ஒரு மாற்றம் வந்தால் கல்யாணம் செய்வது ஒரு சப்பை மேட்டர்.



நான் சொன்னது போல ஐடியா இருந்தால் கல்யாணம் ஒரு பாரமாக தெரியாது. பெரிசா கஷ்டப்படு உழைக்கணும், குடும்பத்த முன்னேர்ரனும் என்கிற பெரிய ரிஸ்க் எடுக்க தேவையில்லை. அவங்க வீட்ல எல்லாம் அவளுக்கு பாத்துக்குவாங்க . நம்ம ஜாலிய கல்லூரி மாணவன் போல கல்யாணம் கட்டிய பிறக்கும் ஜாலிய வாழ்கைய என்ஜாய் பண்ணலாம்.

1 கருத்து:

  1. vanakkam kadi
    ippadi ellaam eluthinal kadi.com piraku aadi.com aakaathungala ethukkum saththana saappadu saappudungo appaththan vaangalamungo

    nanri vanakkam
    puthiya varavai ethir parkkum oru uravu

    பதிலளிநீக்கு