செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி ?

ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தற்போதைய வாழ்க்கையில் தேவை அல்லவா? இதில் எவ்வளவு பேர் கடுமையாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று யோசிக்கிறார்கள்? அப்படி எல்லாரும் நினைப்பதானால் லாட்டரி சீட்டு கடைகளும் கபே கடைகளில் உள்ள சுரண்டல் லாட்டரிகளும் எதற்காக? எவ்வளவுபேர் கியூவில் நின்று கடுமையாக உழைத்தது லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். எனவே பணம் தான் முக்கியம். எனவே எந்த விதமமான கஷ்டமும் படாமல் கோடீஸ்வரன் ஆகலாம். அதற்கான திட்டம் கீழே.

உதாரணமாக நீங்கள் வசிக்கும் நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை என்பது இத்திடத்தின் முக்கியமாம அம்சம். உதாரணமாக ஐந்து கோடிபேர் உள்ள நாடு என வைத்துக் கொள்வோம். கனடா என ஒரு பேச்சுக்கு வைத்துகொண்டாலும் அங்கே உள்ள மக்கள் தொகை சுமார் ஐந்து கோடி பேர். அதிலே பாதிப்பேர் வரை ஒரு பிச்சைகாரனுக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது பிச்சை போடும் குணமும் தாரள மனதும் நிச்சயம் இருக்கும். அதாவது இரண்டரை கோடி பேர் நிச்சயம் தருவார்கள். இதுதான் நமது திட்டத்தின் ஆரம்ப மையம். தினமும் நாம் குறைந்தபடம் பாத்து பேரிடம் ஒரு ஒரு ரூபாய் படி பிச்சை எடுக்க வேண்டும். இதில் பன்னிரண்டு ரூபாய் எடுத்தால் அதில் இரண்டு ரூபாயை சொந்த அன்றாட செலவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஒருநபரிடம் ஒரு ரூபாய் படி இரண்டரை கோடி பேரிடமும் நாம் பிச்சை எடுத்தால் ஒரு குறிபிட்ட காலத்தில் இரண்டரை கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகலாம். பின்னர் இந்த்த பணத்தை பாங்கில் போட்டு வட்டிக்கு விடுவதன் மூலமும் அல்லது தினசரி வட்டி, மீட்டர் வட்டி, கந்து போன்ற அரகாரியங்கள் மூலமும் நாம் அந்த இரண்டரை கோடி ரூபாயை மேலும் மேலும் பன்மடங்கு ஆக்கலாம்.

இத்திட்டத்தினால் உள்ள பயன்கள்...

... ஒவ்வொரு மனிதனும் இதன் மூலம் கோடீஸ்வரன் ஆகலாம் என்பதுடன் அடுத்து அடுத்து பிச்சை கேட்க வருபவருக்கு தினசரி ஒரு ரூபாயை அளிப்பதன் மூலம் அவர்களையும் கோடீஸ்வரன் ஆக்கலாம்.

...பிச்சை எடுப்பது என்ற சிறிய வேலையை தவிர வேறு எந்த வேலையும் செயவேண்டிய அவசியம் இல்லை.

...பிச்சை எடுத்துக்கொண்டே பணக்காரன் ஆகவும் மாறிவிடுவதால் ஒருவன் பணக்காரனா அல்லது பிச்சைகாரனா என்ற சந்தேகத்தை சமுதாயத்துக்கு ஏற்படுத்துவதன் மூலம் பிச்சைக்காரன் என்ற சொல்லை இல்லாமல் ஆக்க முடியும்.

... நாட்டில் பண புழக்கம் அதிகமாகும்.

... தினசரி நாம் யாரோ ஒருவருக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுவதன் மூலம் ஐயோ என்னுடைய இரண்டரை கோடியிலிருந்து பணம் குறைகிறதே என்று கவலை படத்தேவையில்லை. காரணம் பாங்கு வட்டியிலிருந்து தான் நீங்கள் பிச்சை போடப் போவதனால் காசு எக்காரணம் கொண்டும் குறையாது.

... பிச்சை எடுக்கும் பொது பல வேசங்கள் பாசை கல் பேச வேண்டி வரும் என்பதால் ஒரு நடிகனாக அல்லது நல்ல பேச்சு ஆற்றல் உள்ளவனாக வர வாய்ப்புகள் உண்டு.

... விதவிதமான இடங்களும் சாப்பாடுகளும் கிடைக்கும். இது எக்ஸ்ட்ரா போனஸ்.

இத்திட்டத்தினால் உள்ள தீமைகள்..

... பிச்சைக்காரன் என யாரவது சொல்லிவிடலாம் என்ற கவுரவ குறைச்சல் ஏற்படலாம்.

... உங்களுக்கு நடிக்க தெரியாது விட்டாலும் பிச்சை எடுப்பது போல நடிக்க வேண்டி வரும்.

... ஊனமுற்றவர் போல நடிக்க வேண்டி வந்தால் சில நேரம் கை கால் வெட்டு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

...கோடீஸ்வரன் ஆவது என்று முடிவுகட்டிவில்லால் அதற்காக கடுமையாக உழைப்பதை தவிர எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கவேண்டும்.

மற்றபடி இத்திட்டத்தின் படி பார்த்தால் கோடீஸ்வரன் ஆவது பெரிய நாசாவுக்கு சாடிலைட் அனுப்பும் கம்ப சூத்திரம் இல்லை. சப்பை மேட்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக