திங்கள், 2 பிப்ரவரி, 2009

இனி கார் தேவையில்லை

என்னத்தை பற்றி எழுதலாம் என யோசித்தபோது சமுதாயத்துக்கு ஏதாவதுஅறிவுரை சொல்கிறேன் பேர்வழி என சீரியசான விசயங்களை எழுதி போரடிக்கஎனக்கு விருப்பமில்லை. சும்மனாச்சுக்கும் எனக்கு கொஞ்சாம் காமெடியானஐடியாக்கள் சாதாரணமாக வரும். எனக்கு மட்டுமே ஏன் இப்படி தோன்றுகிறதுஎன்று தெரியவில்லை. முதல் கட்டமாக ஒருசில ஐடியாக்களை இதன் மூலம்எழுத விரும்புகிறேன்.

உலகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் பிரச்சனைக்கு வாகனக்களிளிருத்ந்து வெளியேறும் அதிகளவு புகை தான் காரணம் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த வாகனக்களிருந்த்து வெளியேறும் புகையினை கட்டுப்படுத்தி எரிபொருள் செலவை எவ்வாறு குறைப்பது என யோசித்தேன். கொஞ்சம் செலவு பிடிக்கும் திட்டம் என்றாலும் ஒருதடவை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் வாகனங்களால் புகையும் வராது என்பதோடு வெப்பமும் கூடாது. என்ன திட்டங்கள் என்று பார்ப்போமா?

ஐடியா நம்பர் ஒன்று.
இப்போது உள்ள சாலைகளை இடித்து விட்டு நான் கீழே சொல்வது போல மாற்றி அமைக்க வேண்டும். ஒரே ரோட்ல போற வாகனமும் வர்ற வாகனமும் ஒரே நேரதில வர்றமாதிரி அமைக்க கூடாது. இரண்டையும் தனித்தனியா அமைக்கணும். உதாரணமா நீங்கள் மலை உச்சியிலிருந்து சைக்கிளில கீழே வரனுமுன்ன எப்படி வருவீங்க ? காலால பெடலை மிதிக்காமல் இறக்கத்தில ஜம்முனு எவ்வளவு வேகமா வருவீங்களோ அதே ஐடியாதான் .

இப்போ உதாரணமா மதுரையிலிருந்து சென்னை வரை வர்ற ரோட்ல சுமார் ௨00 கி மீ என்று வையுங்கள் . எந்தவிதமான வளைவும் வரக்கூடாது. (வளைவு ன்ன தமிழில பெண்டு அல்லது டர்நிங்). ஒரே நேர் ரோடாஇருக்கணும். ரோடின் சாய்வு அமைவு விகிதம் சுமார் ௨00 செ மி தாழ்வு ஒரு கி மீ என்று வைத்து கொண்டாலும் ௨00 மீட்டருக்கும் சுமார் இரண்டு மீட்டர்சாய்வுதான் (ஸ்லோப்) தேவை. எனவே ஏற்கனவே உள்ள பழைய ரோடை இடித்து விட்டுபோவதற்கு தனி வழியும் வருவதற்கு தனி வழியும் உள்ள இருவழி பாதைஅமைக்க வேண்டும். அவ்வளவுதான். உதாரணத்துக்கு மதுரையில் இருந்துசென்னை வரை செல்லும் ரோடை எடுத்துகொள்வோம். அல்லதுநியுயோர்க்கிலிருந்து கனடா வரை அல்லது சுவிசிலிருந்து ஜெர்மன் வரை எனஎந்த இடத்துக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

மதுரையில் ரோடு தொடங்கும் இடத்தை தரையில் இருந்து சுமார் மூன்று மீ உயரத்தில் ஒரு பாலம் போல சென்னைவரை ஸ்லோப் ஆக அமைக்க வேண்டும். அதில் தொடங்கி சென்னைவரை ௨00 செ மி சாய்வு இறக்கத்தில் (மலையில் இருந்து சைக்கிளில்இறக்கத்தில் பெடலை மிதிக்காமல் வருவது ஞாபகம் இருக்கட்டும் ) எனவே நீங்கள் ஆக்சிலேட்டரை மிதிக்காமல் சும்மா இச்டீரிங்கை திருப்பினால் போதும். ஏன் என்னுடைய திட்டப்படி வாகனம் பள்ளத்தில் செல்ல கூடியது என்பதால் இனிகாரே தேவையில்லை. கார் வாங்கும் காசு மிச்சம். ஒவ்வொரு சைக்கில்வாங்கினால் போதும்.
இது இப்படியிருக்க உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம் . அதாவது ரோடுதொடங்குமிடமான மதுரையில் ரோடு மூன்று மீ உயரத்தில் இருப்பதால் எப்படிகாரை மேலே கொண்டுபோவது என்பது தானே? அதற்கும் வழி உள்ளது. ரோடுதொடங்குமிடத்தில் ஒரு லிப்ட் ஒன்றை வைத்து வரும் வாகனங்களைவரிசையாக மேலீ ஏற்றலாம் . அவளவுதான் அதன் பின்னர் கார் ஒவ்வொன்றும்பெட்ரோல் இல்லாமல் புகை இல்லாமல் செலவு இல்லாமல் போகும். இதற்கிடையே இடையில் ஏதாவது இடத்தில் திரும்பி வேறு ஒரு ஊருக்கு செல்லவேண்டும் என்றாலும் இதே சிஸ்டம் தான். இடையில் ரோடு பிரிந்து இதேபோல்பள்ளமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும்.

சென்னையில் இருந்து மதுரை வரும் ஐடியாவும் இதேபோல் தான். முதலில்இத்திட்டத்தை பெரிய நகரங்களுக்கு அறிமுகபடுதியதன் பின்னர் படிப்படியாகபிற ஊர்களுக்கும் விஸ்தரிக்கலாம். ஒருவேளை கன்யாகுமரிவரை இதேபோல் பள்ளமான ரோடில் வரும் வாகனம் மதுரையில் இறங்கவேண்டும் என்றால் மதுரை லிப்ட் பாயிண்டில் நின்று லிப்ட் மூலம் கீழே இறங்கலாம்.

இத்திட்டத்தில் உள்ள சாதமான விடயங்கள்.
.. கார் வாங்கவேண்டிய செலவு மிச்சம்.
.. சுமார் இரண்டாயிரமா ரூபாயில் ஒரு சைக்கில் வாங்கினால் போதும்.
.. ரிப்பேர் செலவு, பெட்ரோல் செலவு, டிரைவர் செலவு மிச்சம்.
.. லைசென்ஸ் வாங்கவேண்டியதில்லை.
.. ஆண், பெண் , குழைந்தைகள் அனைவரும் நினைத்தவுடன் தனியாக சென்னை அல்லது வேண்டிய இடம் செல்லலாம்.
..போலீஸ்,மாமூல், இதர தொல்லைகள் குறையும்.
..எல்லாரிடமும் வாகனம் இருக்கபோவதால் ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு குறையும்.
.. எல்லா வாகனமும் வரிசையாக பள்ளத்தில் பாலத்தில் செல்வதால் கடத்தல், தப்பி ஓடுதல் , போன்றவை செய்ய முடியாது.

இத்திட்டத்தினால் ஏற்படும் பாதகமான விஷயங்கள்.

.. பெரிய கார் கம்ப்பெனி முதலாளிகள் தொழிலதிபர்கள் கார் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வீடிற்கு போகவேண்டிவரும். எனவே எனக்கு கொலை மிரட்டல்கள் வரும்.
.. செலவு பிடிக்கும் திட்டம் என்பதால் சுமார் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படும்.
.. அரசியல்வாதிகள் தங்கள் இஸ்டத்திற்கு பலநூறு கார்களில் பவனி வந்து பந்தா காடமுடியாது என்பதால் நிச்சயம் எனக்கும் இத்திடதிற்கும் எதிர்ப்புகள் வரும்.
.. வாகனம் யாவும் பள்ளத்தில் செல்வதால் நினைத்தவுடன் பிரேக் அடிக்க முடியாது.


அடுத்து பாரம் சுமக்கும் கனரக வாகனங்களால் புகை வருவது கூட என்பதால்பொருட்களை வாகனமே இல்லாமல் வேண்டிய இடத்திற்கு கொண்டுசெலும்திட்டமும் இருக்கு. அது அப்புறம் பார்க்கலாம். கருத்தை எழுதுங்க ஆனால்அடிக்க வராதீங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக